sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காரியாபட்டி நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படுமா

/

காரியாபட்டி நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படுமா

காரியாபட்டி நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படுமா

காரியாபட்டி நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படுமா


ADDED : ஜன 28, 2025 04:59 AM

Google News

ADDED : ஜன 28, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் குற்றவியல் நடுவர், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டியில் சில மாதங்களுக்கு முன் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது. பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. அக்கட்டடத்தில் தற்காலிகமாக வசதிகள் செய்யப்பட்டன. இருந்தாலும் இது போதுமானதாக இல்லை. வழக்குகள் சம்பந்தமாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே கழிவுநீர் தேங்கும் குளம் உள்ளது.

இதிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் அங்கு இருப்பவர்களை முகம் சுளிக்க செய்கிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. வக்கீல்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. காரியாபட்டியில் ஏராளமான அரசு நிலங்கள் உள்ளன. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி வருகின்றனர். அதுபோன்ற இடங்களை கண்டறிந்து மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இடம் தேர்வு செய்து, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us