ADDED : ஜூலை 02, 2025 08:00 AM
அ நிறம் | அளவு
சாத்துார்; சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் ராஜ் மோகன் 62 ,மேட்டமலையில் புதியதாக காம்ப்ளக்ஸ் கட்டி வருகிறார்.
இந்த காம்ப்ளக்ஸ்சில் வயரிங் வேலை செய்வதற்காக ரூ 15,700 மதிப்புள்ள வயர்கள் வாங்கி புதிய காம்ப்ளக்ஸ் கட்டும் இடத்தில் உள்ள தகர செட்டில் வைத்து பூட்டு போட்டு பூட்டிவிட்டு நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு சென்றார்.காலையில் சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த வயர்கள் திருட்டுப் போயிருந்தன. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
