ADDED : மார் 07, 2026 07:27 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே நோபிள் பெண்கள் கல்லுாரி, ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர். மாணவி ஜெயஸ்ரேயா வரவேற்றார்.
நோபிள் கல்விக்குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் வெர்ஜின் இனிகோ வாழ்த்தினார். முதல்வர் மகேஸ்வரி வாழ்த்தினார். ரோட்டரி நிர்வாகிகள் பானுப்பிரியா, அலமேலு நாச்சியார், கிங்டம் தலைவர் ஜெயிலானி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ஸ்ரீராம், வரதராஜ் ஆகியோர் பேசினர். மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன. மாணவி யுவலெட்சுமி நன்றி கூறினார்.
