ADDED : மார் 08, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா அகாடமி ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது.
கல்லூரி நிர்வாக குழு தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். நிகழ்ச்சியை முன்னிட்டு சௌடாம்பிகா கல்வி குழுமத்தை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி, நர்சரி பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளி, மெட்ரிக் பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் பணி புரிந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு சமையல் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த கார்த்திகா முதல் பரிசும், பாலிடெக்னிக்கை சேர்ந்த பிரியவதனா 2ம், பரிசையும், தனலட்சுமி 3ம் பரிசையும் பெற்றனர்.
