sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

/

 சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


ADDED : ஜன 04, 2026 06:42 AM

Google News

ADDED : ஜன 04, 2026 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அப்பயநாயக்கன்பட்டி வீர மணிகண்டன் 30. பட்டாசு ஆலை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். 2020ல் இவரது அலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பில் பேசிய சிவகாசியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பேசி பழகி உள்ளார்.

தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கோவையில் சரியான வேலை கிடைக்காததால், தன்னை தனது தாய் வீட்டில் விட்டு விடுமாறு கூறியதால், சிறுமியை அழைத்து வந்த வீரமணிகண்டன், திருத்தங்கல் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

திருத்தங்கல் போலீசார் வீர மணிகண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

வீரமணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us