ADDED : அக் 28, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 268 வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் பென்னிங்டன் நூலக கலையரங்கில் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கந்தசாமி பாடினார். எழுத்தாளர் பத்மா வரவேற்றார். மறைந்த எழுத்தாளர்கள் கோதண்டம், துரைராஜா ஆகியோருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் எழுத்தாளர் பொன் சுப்புராஜ் படைப்புகளை விமர்சித்து புலவர் சிவனனைந்த பெருமாள், பேராசிரியர் மணிமேகலை, எழுத்தாளர்கள் மகேஸ்வரி, காளியப்பன் பேசினர். பொன் சுப்புராஜ் ஏற்புரையாற்றினார். மாணவர்களின் பட்டிமன்றம் நடந்தது. அங்கு ராஜ் நன்றி கூறினார்.

