நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தின விழா வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் யோகா பயிற்சியை துவக்கி வைத்தனர். மாணவர் நல இயக்குனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். யோகா பயிற்சியாளர்கள் ஜெயந்தி, சரவணன், பாண்டியராஜ் பயிற்சிகளை செய்து வழிநடத்தினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். அதிகாரிகள் ராஜா பிரதீஷ், சுரேஷ்குமார் செய்திருந்தனர்.