sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காவிரியில் மூழ்கும் வீடுகள்; காலி செய்ய மறுக்கும் மக்கள்மின் நிலைய பணி நிறைவால் ஈரோடு வரை தேங்கும் ந

/

காவிரியில் மூழ்கும் வீடுகள்; காலி செய்ய மறுக்கும் மக்கள்மின் நிலைய பணி நிறைவால் ஈரோடு வரை தேங்கும் ந

காவிரியில் மூழ்கும் வீடுகள்; காலி செய்ய மறுக்கும் மக்கள்மின் நிலைய பணி நிறைவால் ஈரோடு வரை தேங்கும் ந

காவிரியில் மூழ்கும் வீடுகள்; காலி செய்ய மறுக்கும் மக்கள்மின் நிலைய பணி நிறைவால் ஈரோடு வரை தேங்கும் ந


ADDED : செப் 25, 2011 06:12 AM

Google News

ADDED : செப் 25, 2011 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அருகே காவிரி ஆற்றில், நீர் மின் நிலைய பணி நிறைவு பெற்றதால், ஈரோடு வரை காவிரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இரு கரையிலும், மூழ்கும் வீடுகளில் இருந்து வெளியேற மக்கள் மறுக்கின்றனர்.ஈரோடு அருகே வெண்டிபாளையம் மற்றும் பாசூரில், 800 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணி, 2007ல் துவங்கியது. வெண்டிபாளையம் தடுப்பணை பணி நிறைவு பெற்று, மின் உற்பத்திக்கு தயாராகியுள்ளது. பாசூர் தடுப்பணை பணி ஓரிரு மாதங்களில் நிறைவுபெறும்.

வெண்டிபாளையம் நீர்மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், ஈரோடு காவிரிக்கரை வரை, 6 கி.மீ., தூரத்துக்கு தேங்கி நிற்கிறது.



ஈரோடு காவிரிக்கரையில் 300 வீடுகளும், எதிர்கரையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில், 800க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. பெரும்பாலும் சலவைத் தொழிலாளர்களே வசிக்கின்றனர். வீடுகளை காலி செய்யுமாறு இவர்களுக்கு, 2007லேயே நோட்டீஸ் வழங்கப்பட்டது. பச்சபாளி கிராமத்தில் மாற்று இடமும் வழங்கப்பட்டது.

புதிதாக வழங்கப்பட்ட இடம், ஆற்றில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால், அங்கு செல்ல சலவைத் தொழிலாளர்கள் மறுத்து விட்டனர்.



இன்று வரை, காவிரிக்கரையிலேயே வசிக்கின்றனர். பள்ளிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் பெரும்பாலானவை கான்கிரீட் வீடுகள். அங்குள்ள மக்களும், வீடுகளை விட்டு வெளியேறாமல், வசித்து வருகின்றனர்.நீர்மின் நிலைய தடுப்பணையின் உறுதியை பரிசோதிக்கும் வகையில், டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர், அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், ஈரோடு, பள்ளிபாளையம் பகுதி காவிரிக்கரை வீடுகள், மெல்ல மெல்ல நீரில் மூழ்கி வருகின்றன.மின் உற்பத்தி பணி முழுமையாக துவங்கிய பின், அவசர கதியில் இங்குள்ள மக்களை வெளியேற்றாமல், உரிய பேச்சுவார்த்தை மூலம், இவர்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும்.








      Dinamalar
      Follow us