sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளாட்பாரத்தில் உணவுப்பொருள் விற்க தடை நீங்குமா, நீடிக்குமா? உத்தரவை வாபஸ் பெற ஆர்ப்பாட்டம்

/

பிளாட்பாரத்தில் உணவுப்பொருள் விற்க தடை நீங்குமா, நீடிக்குமா? உத்தரவை வாபஸ் பெற ஆர்ப்பாட்டம்

பிளாட்பாரத்தில் உணவுப்பொருள் விற்க தடை நீங்குமா, நீடிக்குமா? உத்தரவை வாபஸ் பெற ஆர்ப்பாட்டம்

பிளாட்பாரத்தில் உணவுப்பொருள் விற்க தடை நீங்குமா, நீடிக்குமா? உத்தரவை வாபஸ் பெற ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 17, 2011 11:25 PM

Google News

ADDED : செப் 17, 2011 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் உணவுப்பொருள் விற்க, ரயில்வே நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.



ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில்களில், உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதித்ததைக் கண்டித்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த ரயில்வே கேட்டரிங் பிரிவு, ரயில்வே கான்டிராக்ட் தொழிலாளர் சங்கத்தினர் (ஆர்.சி.எல்.யு.,), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.சி.எல்.யு., கிளைத்தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். ஆர்.சி.எல்.யு., மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: ரயில்வே ஸ்டேஷன் வரும் ரயில்கள், சில நிமிடங்கள் நின்று செல்கின்றன. ரயில் நிற்கும் குறுகிய நேரத்தில், பயணிகள் இறங்கிச் சென்று வாங்க இயலாது. பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு, பிளாட்பார கடைகளின் தொழிலாளர்கள், பெட்டிகளுக்குச் சென்று உணவுப்பொருட்கள் விற்பனை செய்கினறனர். ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வயதானோர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் பயன்பெறுவர்.



கடந்த நான்கு நாட்களாக, டீ, காபி, குளிர்பானம், குடிநீர், பழங்கள், பிஸ்கட் போன்ற எந்தப் பொருளும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஐ.ஜி.,யின் உத்தரவு என்று, ரயில்வே பாதுகாப்புப் படையினர் தடை விதிக்கின்றனர். இந்த உத்தரவின் மூலம், பிளாட்பாரத்தில் கடை எடுத்திருக்கும் முதலாளிகள், தொழிலாளர்கள், பயணிகள் அனைவரும் பாதிக்கப்படுவர். ஏலத்தில் எடுத்த கடைகள் பாதிக்கும் போது, ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் குறையும். உணவுப்பொருள் விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை என்றால், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு, ராமமூர்த்தி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலர் ஆறுமுகம், சாலைப் போக்குவரத்து செயலர் மூர்த்தி, கோவை ஆட்டோ சங்க செயலர் சுகுமாரன், டி.ஆர்.ஈ.யு., சேலம் கோட்ட உதவி தலைவர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



ரயில்வே நிர்வாக உத்தரவு: ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஷாம்நாத் கூறுகையில், ''பிளாட்பாரங்களில் உணவுப்பொருள் விற்பனை செய்ய தடை விதிக்கும் உத்தரவினை, கடந்த இரண்டு மாதத்திற்கு முன், ரயில்வே நிர்வாகம் பிறப்பித்தது. தற்போது, ஐ.ஜி.,யின் உத்தரவின்படி அமல்படுத்தப்படுகிறது'' என்றார்.








      Dinamalar
      Follow us