sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துப்புரவு பணியாளர்கள் நலன் தமிழகத்தில் எப்படி: தேசிய கமிஷன் உறுப்பினர் கருத்து

/

துப்புரவு பணியாளர்கள் நலன் தமிழகத்தில் எப்படி: தேசிய கமிஷன் உறுப்பினர் கருத்து

துப்புரவு பணியாளர்கள் நலன் தமிழகத்தில் எப்படி: தேசிய கமிஷன் உறுப்பினர் கருத்து

துப்புரவு பணியாளர்கள் நலன் தமிழகத்தில் எப்படி: தேசிய கமிஷன் உறுப்பினர் கருத்து


ADDED : செப் 22, 2011 12:34 AM

Google News

ADDED : செப் 22, 2011 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களின் நலனுக்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்,'' என, துப்புரவு பணியாளரின் தேசிய கமிஷன் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.தமிழகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றும் சூழல், வாழ்வாதார நிலை போன்றவை திருப்திகரமாக இல்லையென, துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷனின் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.



சென்னை உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் நேற்று அவர் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட நாட்டின் பல மாநகரங்களில் துப்புரவு பணியாளர்களின் தொழில் சூழல், வாழ்வாதார நிலை போன்றவை கவலையளிப்பதாக உள்ளது.

துப்புரவு பணியாளர்களை கழிவுகளை அகற்றும் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது என, அரசியல் சட்டமும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளும் கூறிய பின்னும், அவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது.துப்புரவு பணிகளில் குழந்தைகளையும், பெண்களையும் ஈடுபடுத்தக் கூடாது என்பதும் மீறப்பட்டுள்ளது.



துப்புரவு பணிகள் செய்யும் போது கையுறை போன்றவை வழங்க வேண்டும் என்பதும் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.துப்புரவு பணியாளர்களின் தொழில் சூழல், வாழ்வாதார நிலை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழக அளவில் துப்புரவு பணியாளர் கமிஷன் அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்.துப்புரவு பணியாளர்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் தாட்கோ நிறுவனம் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் விரைவில் முன்வைக்கப்படும்.தமிழகத்தில், கடந்த 20 ஆண்டுகளில், துப்புரவு பணியாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டதும், அதன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அளிக்கப்பட்ட தண்டனை ஆகியன குறித்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.








      Dinamalar
      Follow us