sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்ளாட்சி தேர்தல் பணியால் மாணவர்கள் கல்வி பாதிக்கும்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

/

உள்ளாட்சி தேர்தல் பணியால் மாணவர்கள் கல்வி பாதிக்கும்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் பணியால் மாணவர்கள் கல்வி பாதிக்கும்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் பணியால் மாணவர்கள் கல்வி பாதிக்கும்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு


ADDED : செப் 17, 2011 11:29 PM

Google News

ADDED : செப் 17, 2011 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தல் பணியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உதவி தேர்தல் அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இப்பணிக்காக ஆசிரியர்கள் குறைந்தது 15 நாட்களாவது செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பாடங்கள் நடத்த இயலாது. ஒரு சில மாவட்டங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது, என்ற எண்ணத்தில், வட்டார வள மைய ஆசிரியர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், பொதுப்பணி, வேளாண் துறை அலுவலர்கள், கல்வி அலுவலர்கள் ஆகியோரை நியமித்து உள்ளனர். பெரும்பான்மையான மாவட்டங்களில் ஆசிரியர்களையே நியமிக்கின்றனர். ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே இரண்டு மாதமாக புத்தகம் இல்லை. தற்போதுதான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் பணிக்கும் செல்லும் நிலையில், மாணவர்களின் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது. எனவே ஆசிரியர்களை தவிர்த்து பிற துறையில் உள்ளவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும், என்றார்.








      Dinamalar
      Follow us