sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயிலில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

/

ரயிலில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

ரயிலில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

ரயிலில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு


ADDED : செப் 06, 2011 10:31 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதுச்சேரியிலிருந்து, சென்னை வந்த பயணிகள் ரயிலை, நேற்று முன்தினம் இரவு, பராமரிப்புக்கான யார்டுக்கு கொண்டு சென்று பெட்டிகளைச் சுத்தம் செய்தபோது, ஒரு பெட்டியில், இரு ஐம்பொன் சிலைகள் கிடந்தன.

ஊழியர்கள், எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று, ஐம்பொன்னால் ஆன, முக்கால் அடி உயரமுள்ள, அம்மன் சிலை, ஒரு அடி உயரமுள்ள, சிவன்-பார்வதி சிலையை மீட்டனர். இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. 'கைப்பற்றிய சிலைகள் இரண்டும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை தொடரும்' என, போலீசார் கூறினர்.








      Dinamalar
      Follow us