ADDED : செப் 29, 2011 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்து, 'திருமங்கலம் பார்முலா' பிறந்த இடத்தில், உள்ளாட்சி தேர்தலுக்காக பணம் வினியோகம் செய்ததற்காக, தி.மு.க., வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நகராட்சி, 3வது வார்டில், தி.மு.க., வேட்பாளர் ஜெயபால், மனு தாக்கல் செய்வதற்காக ஆதரவாளர்களுடன் வந்தார். வேட்புமனு தாக்கல் முடிந்த பின், ஆதரவாளர்களுக்கு, திருமங்கலம் அரசு மருத்துவமனை அருகில், அவர், பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த எஸ்.ஐ., கமர்நிஷா, ஜெயபாலை கைது செய்து, வினியோகம் செய்தது போக, மீதி வைத்திருந்த, 2,900 ரூபாயையும் பறிமுதல் செய்தார்.