sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பணம் பெற்றால் சிறை : கலெக்டர் எச்சரிக்கை

/

பணம் பெற்றால் சிறை : கலெக்டர் எச்சரிக்கை

பணம் பெற்றால் சிறை : கலெக்டர் எச்சரிக்கை

பணம் பெற்றால் சிறை : கலெக்டர் எச்சரிக்கை


ADDED : அக் 03, 2011 06:32 PM

Google News

ADDED : அக் 03, 2011 06:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: ''ஓட்டுக்காக அன்பளிப்போ, பணமோ பெறும் வாக்காளருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை கிடைக்கும்,'' என, திருச்சி கலெக்டரும், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அலுவலருமான ஜெயஸ்ரீ, பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 13ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலை நேர்மையாக நடத்த, அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதுகுறித்து கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஜெயஸ்ரீ, நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் குற்றம். பணம் வாங்குவதும் குற்றம். இதுவரை வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு கொடுத்ததாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த முறை, வேட்பாளர்களிடம் இருந்து பொருளோ, பணமோ, அன்பளிப்போ பெறும் வாக்காளர் மீதும் வழக்கு தொடரப்படும். இதற்கு, மூன்றாண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். ஆகவே, தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.






      Dinamalar
      Follow us