sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ தினமும் ஒரு பெருமாள் -11

தினமும் ஒரு பெருமாள் -11

தினமும் ஒரு பெருமாள் -11


ADDED : டிச 25, 2024 08:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 08:46 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரம் தரும் வரதராஜர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள வரதராஜப்பெருமாள் கேட்ட வரத்தை கொடுப்பதற்கு ரெடியாக காத்திருக்கிறார்.

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். பல இடங்களுக்கு சென்று விட்டு இந்த மலைப்பகுதிக்கு வந்தனர். அப்போது பாண்டவர்களில் ஒருவனான

அர்ஜூனன் இங்கு பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவர்தான் நாம் கேட்ட வரத்தை கொடுக்கும் வரதராஜப்பெருமாள். மேற்கு நோக்கி காட்சி தரும் இவரை சனிக்கிழமையன்று வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். உத்ராயண காலமான தை முதல் ஆனி வரை சூரியக்கதிர்கள் இவரது பாதத்தில் விழுகிறது. பெருந்தேவி தாயார் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். சோழர்கள், ெஹாய்சாளர்கள், விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

ஒசூரில் இருந்து 25 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி

மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 96776 47992, 04344 - 252 608

அருகிலுள்ள தலம்: ஒசூர் வெங்கடேஸ்வரர்

31 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 11:00 மணி

மாலை 4:00 - 8:00 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us