ADDED : செப் 06, 2011 10:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே லஞ்சமேடு கைகாட்டியில், அரசு டவுன் பஸ்- ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதியது.
இவ்விபத்தில், 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துவரங்குறிச்சி அருகே நடந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலெட்சுமி, 35 என்ற பெண் சிகிச்சை பலனி்ன்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

