ADDED : மார் 03, 2025 08:10 PM

கூலி கொடுப்பான்
ரம்ஜான் மாதத்தின் சிறப்பை தெரிந்து கொள்வோமா...
* ரம்ஜான் மாதம் வந்தால் வானுலகத்தின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்க படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்க படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன.
* சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். நோன்பு இருப்பவரைத் தவிர வேறு யாரும் அந்த வாசல் வழியாக நுழைய மாட்டார்கள்.
* ரம்ஜான் மாதத்தில் ஈமானுடனும் (நம்பிக்கை), நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்கள், 'லைலத்துல் கத்ர்' இரவில் (ரம்ஜானின் புனிதமான இரவு) நின்று வணங்குபவர்களின் சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
* நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாளில் விழித்திருந்து தொழுகை செய்பவர்களின் உள்ளம், கியாம நாளில் விழிப்புடன் இருக்கும்.
* நோன்பு எனக்குரியது. அதற்கு இறைவனே கூலி கொடுப்பான். ஏனென்றால் அவன் திருப்திக்காக பசித்திருக்கிறோம். இச்சைகளை அடக்கினோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:00 மணி