sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொய் வழக்கால் தி.மு.க.,வை அழிக்க முடியாது : எம்.பி.,

/

பொய் வழக்கால் தி.மு.க.,வை அழிக்க முடியாது : எம்.பி.,

பொய் வழக்கால் தி.மு.க.,வை அழிக்க முடியாது : எம்.பி.,

பொய் வழக்கால் தி.மு.க.,வை அழிக்க முடியாது : எம்.பி.,


ADDED : ஜூலை 25, 2011 08:18 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:''பொய் வழக்குகள் மூலம், தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் அழித்து விட யாராலும் முடியாது,'' என, ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம் தெரிவித்தார்.சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் சரண் அடைய வந்த மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் வந்த ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வை அழித்து ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தில், அரசு செயல்பட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதா, தி.மு.க.,வை, அழிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருவது நிச்சயம் நடக்காது.சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்யும் நோக்கில் போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை சந்திக்க தயார். குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட உண்மையில்லை. தூண்டுதலின் பெயரில் வேண்டும் என்றே வழக்கு போடப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளால், தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் அடக்கி அழித்து விட முடியாது. நேற்று முன்தினம், தி.மு.க., பொதுக்குழுவிலும் தலைவர் கருணாநிதி இதைத் தான் தெரிவித்துள்ளார்.தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் அழித்து விட ஒரு ஜெயலலிதா அல்ல ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us