ADDED : ஆக 14, 2011 07:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம் பனப்பிரட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதியார் தெருவில் குடியிருக்கும் ராஜ்குமார் என்பவரது மகள் சோனாலி(6).
குழந்தை அப்பகுதியில் உள்ள வேளாண் கிணற்றில் தவறி விழுந்து பலியானாள். இதனையடுத்து கரூர் மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள், 15 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.