sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்

/

சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்

சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்

சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்


ADDED : ஆக 28, 2011 01:08 AM

Google News

ADDED : ஆக 28, 2011 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தமிழகத்தை சேர்ந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சட்டக் கல்லூரி மாணவர்கள், நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராஜிவ் கொலை வழக்கில், தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு, வரும் 9ம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது; இதை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் நேற்று, சட்டக் கல்லூரி மாணவர்கள் 22 பேர், சென்னை செல்ல தயாராக இருந்த ரயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் துறை உதவி கமிஷனர் அய்யாசாமி, பி4 ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், ரயில்வே போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், உடன்பாடு ஏற்படாததால், மாணவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.








      Dinamalar
      Follow us