ADDED : செப் 15, 2011 03:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: அவதூறு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் கைது செய்யப்பட்டு திருவாரூர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருவாரூரில் கடந்த ஜூன் 5-ம் தேதி நடந்த கூட்டத்தில் , அ.தி.மு.க.பற்றி அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. வைச்சேர்ந்த மூர்த்தி என்பவர் பொன்முடி மீது போலீசில் கொடுத்த புகாரில் பேரில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே நிலமோசடியில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்முடி மீண்டும் கைதாகி திருவாரூர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 29-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ஒத்தி வைத்தார்.

