sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பஸ் மோதி இருவர் பலி

/

அரசு பஸ் மோதி இருவர் பலி

அரசு பஸ் மோதி இருவர் பலி

அரசு பஸ் மோதி இருவர் பலி


ADDED : செப் 23, 2011 11:59 PM

Google News

ADDED : செப் 23, 2011 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது அரசு பஸ் மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்தை அடுத்த வெள்ளங்குழி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 46, அரசுப் பள்ளியில் இரவுக் காவலராக பணிபுரிந்தார். இவரது நண்பர் விக்கிரமசிங்கபுரம் சக்திவேல், 49, அம்பாசமுத்திரத்தில் இருந்து நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு, வெள்ளங்குழி வந்தார். பின் சீட்டில் முத்துராமலிங்கம் அமர்ந்திருந்தார். நேற்று மாலை 5.30 மணியளவில், சேரன் மகாதேவி-அம்பாசமுத்திரம் ரோட்டில், வெள்ளங்குழி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். எதிரே, நாகர்கோவிலில் இருந்து சேர்வலாறு சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சுக்குள் சிக்கி, இரண்டு பேரும் பலியாகினர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பஸ் டிரைவர் நெல்லை, பழவூரைச் சேர்ந்த தர்மநாராயணனை, வீரவநல்லூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us