ADDED : செப் 25, 2011 02:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்டு: நேபாள் நாட்டில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களின் உடல்கள் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு நேபாளம் துணைப்பிரதமர் பிஜய குமார்கச்சாதார் பலியானவர்களின் உடல்களை பார்வையிட்டார்.
விபத்து நடந்தது எப்படி?: காத்மாண்டு: நேபாளில் நடந்த விமான விபத்தில் ,விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் எஞ்சின் பகுதியில் லேசான தீ ஏற்பட்டதாக உள்ளூர் டி.வி. சானலில் விபத்து நடந்ததை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். இதனால் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டதா?, அல்லது விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்து வருகிறது.