ADDED : செப் 27, 2011 05:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஆந்திர மாநில முன்னாள் கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான என்.டி.
திவாரி தனது தந்தை என அறிவிக்கக்கோரி சேகர் என்பவர் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் மரபணு சோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால் இந்த சோதனையில் ஆஜராக திவாரி மறுத்து விட்டார். இதனையடுத்து திவாரி மீது அவமதிப்பு வழக்கு தொடரவும், இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.