ADDED : அக் 05, 2011 07:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலூர்: குடியாத்தம் அருகே மர்ம நபர்கள் சுட்டத்தில் தோட்டத்துக்கு காவல் இருந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22).
இவரது தாய் காந்தம்மாள் (60). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் வேர்கடலை பயிரிட்டுள்ளனர்.இரவு நேரத்தில் வன விலங்குகள் தொல்லை இருப்பதால், நேற்று இரவு, 10 மணிக்கு வெங்கடேசன், காந்தம்மாள் ஆகியோர் தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை, 12 மணிக்கு மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டத்தில் வெங்கடேசன் முகத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பரதராமி போலீசார் விசாரிக்கின்றனர்.

