ADDED : அக் 04, 2011 12:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரில் செயல்பட்டு வரும் முத்தூட் மினி நகை அடகுக்கடையில் 1381 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் கடந்த மாதம் 24ம் தேதி முத்தூட் மினி நகை அடகுக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் 1381 சவரன் நகை மற்றும் ரூ. 2.36 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1106 சவரன் நகை மற்றும் ரூ. 45 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

