sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தூத்துக்குடி பனிமயமாதா சப்பர பவனி கோலாகலம்

/

தூத்துக்குடி பனிமயமாதா சப்பர பவனி கோலாகலம்

தூத்துக்குடி பனிமயமாதா சப்பர பவனி கோலாகலம்

தூத்துக்குடி பனிமயமாதா சப்பர பவனி கோலாகலம்


ADDED : ஆக 05, 2011 09:20 PM

Google News

ADDED : ஆக 05, 2011 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா சப்பர பவனி இன்றிரவு நடந்தது.

ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக தென் தமிழகத்தில் சிறப்புபெற்ற இந்த பேராலய 429வது ஆண்டு திருவிழா ஜூலை 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஜெபம், சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி இன்றிரவு நடந்தது. இரவு 7 .15 மணிக்கு பேராலயத்திலிருந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்ட மாதா, செயின்ட் பீட்டர் ஆலயத்தெரு, வி.இ., ரோடு, தெற்கு ராஜா தெரு, சின்னக்கோயில், ஜி.சி., ரோடு, தெற்கு பீச்ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், நிர்வாகிகள் செய்திருந்தனர்.








      Dinamalar
      Follow us