sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அறிவாலயத்தில் சுதந்திர தின விழா

/

அறிவாலயத்தில் சுதந்திர தின விழா

அறிவாலயத்தில் சுதந்திர தின விழா

அறிவாலயத்தில் சுதந்திர தின விழா


ADDED : ஆக 15, 2011 06:58 PM

Google News

ADDED : ஆக 15, 2011 06:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் சுதந்திர தின விழா முதல் தடவையாக கொண்டாடப்பட்டது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, தி.மு.க., தலைமையகமான, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தலைமையில், காலை 8 மணிக்கு தேசிய கொடியேற்றி, மரியாதை செய்யப்பட்டது.விழாவில், முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம், ராமச்சந்திரன், சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேகர்பாபு, சங்கரி நாராயணன், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் விஜயாதாயன்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் டி.கே.எஸ்., இளங்கோவன் நிருபர்களிடம் பேசும்போது,''மாநில முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

தமிழகம் முழுவதும் தி.மு.க., உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், பிரதிநிதிகள், தேசியக் கொடியை மரபுப்படி, காலை 8 மணிக்கு ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடினர்,'' என்றார்.அப்போது,'ஊழல் காரணமாக, தேசிய அரசியலிலிருந்து தி.மு.க., தனிமைப்படுத்துள்ளதா?' என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, 'தேசிய அரசியலிலிருந்து, தி.மு.க.,வை யாரும் தனிமைப்படுத்த முடியாது' என்று இளங்கோவன் கூறினார்.








      Dinamalar
      Follow us