ADDED : ஆக 30, 2011 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:விருதுநகரை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் ராஜூ ரெட்டியார்.
இவர் இறந்த பின், பலகோடி ரூபாய் சொத்தை மகன்கள் சீனிவாசன், அன்புகரன் போலி உயில் மூலம் அபகரித்ததாக, மகள் சந்திரகலா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சீனிவாசன், அன்புகரன், சார்பதிவாளர் ஆனந்த ராஜாமணி, பத்திர எழுத்தர் முருகேசமணி மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்யக்கோரி ஆனந்தராஜாமணி, முருகேசமணி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை நீதிபதி அக்பர் அலி தள்ளுபடி செய்தார்.

