ADDED : செப் 04, 2011 06:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன்.
இவரது தம்பி மகன் வேல்முருகன். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை வேல்முருகன், கிணற்றுக்கு வைக்கும் வெடியை அர்ஜூனன் வீட்டிற்கு வைத்தார். இந்த வெடி வைத்ததில் வீட்டின் ஒரு பக்க சுவர் சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

