sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி

/

சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி

சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி

சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி


ADDED : செப் 06, 2011 11:49 PM

Google News

ADDED : செப் 06, 2011 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: நிலம் கையகப்படுத்தியதற்கான, நிவாரணத்தொகை வழங்காததால், பெரியகுளம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.



ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன், பழனிவாசன்.

இவர்களது 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்காக, 1990ல் அரசு கையகப்படுத்தியது. கூடுதல் நிவாரணத்தொகை வழங்க கோரி, பெரியகுளம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 11 லட்சத்து 55 ஆயிரத்து 873 ரூபாய் வழங்குமாறு 2002ல் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. சென்ட்டிற்கு 5,000 ரூபாய் வீதம் வழங்க 2010ல் மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. நிவாரணத்தொகை வழங்காததால்,பெரியகுளம் சப் -கோர்ட் நீதிபதி ஜெயக்குமார், பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அலுவலக பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட்டன. நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில், ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.








      Dinamalar
      Follow us