sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.பி.ஐ., மீது ராஜா குற்றச்சாட்டு

/

சி.பி.ஐ., மீது ராஜா குற்றச்சாட்டு

சி.பி.ஐ., மீது ராஜா குற்றச்சாட்டு

சி.பி.ஐ., மீது ராஜா குற்றச்சாட்டு


ADDED : செப் 28, 2011 01:07 AM

Google News

ADDED : செப் 28, 2011 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் வழக்கில், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) ஆவணங்களை, சி.பி.ஐ., வேண்டுமென்றே தாக்கல் செய்யாமல் உள்ளது என, முன்னாள் அமைச்சர் ராஜா, டில்லி கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.



டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கை விசாரித்து வருகிறார். நேற்று, இந்த கோர்ட்டில் ஆஜரான தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா கூறியதாவது:நாட்டின் மிகப் பெரிய ஊழல் வழக்கில், நான் சம்பந்தப்பட்டுள்ளவன் என்பது தெரியும். ரோமிங் வசதி தொடர்பானவற்றில், நான் எந்த விதிமுறையையும் மீறவில்லை. டிராய் விதிமுறையின் அடிப்படையில் தான், இந்த வசதி செயல்படுத்தப்பட்டது.



நான் டிராய் விதிமுறையை மீறி விட்டதாக, சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது. நான் இந்தத் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே, ரோமிங் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. ரோமிங் வசதி விஷயத்தில், நான் டிராய் விதிமுறையை மீறியதாகக் குற்றம் சாட்டும் சி.பி.ஐ., இந்த நிமிடம் வரையில், இது தொடர்பாக டிராய் ஆவணங்களை, சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.



இன்னும் சொல்லப்போனால், தற்போது டில்லி திலக் மார்க் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், இந்த விஷயம் தொடர்பாக, எந்த புகாரையும் எழுதவில்லை. தவறான எண்ணத்துடன் தான், என் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக, ரோமிங் வசதியில்லை என்பதை, சி.பி.ஐ., நிரூபிக்க வேண்டும். நான் அமைச்சராவதற்கு முன்பே, ரோமிங் வசதி இருந்தது. இதற்கு, டிராயும் அனுமதியளித்துள்ளது என்பதை, நான் நிரூபித்தால் என் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. இது தொடர்பாக, யார் என் சார்பில் வாதாடுவது?



டிராயை உதாரணம் காட்டி, என் மீது குற்றம் சாட்டும் சி.பி.ஐ., வேண்டுமென்றே டிராய் ஆவணங்களை, இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யாமல் உள்ளதாக, அதன் மீது நான் குற்றம் சாட்டுகிறேன். விரைவில், டிராய் ஆவணங்களை, சி.பி.ஐ.,இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, ராஜா வாதாடினார்.








      Dinamalar
      Follow us