ADDED : அக் 14, 2011 10:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் உடுமலை பல்லடம் சாலையில் உள்ள கோட்டமங்களம் பகுதியில் உள்ள குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் அங்கிருந்த சமத்துவபுர வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனைதொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். ஆர்.டி.ஓ., ஜெயமணி தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

