ADDED : ஜூன் 22, 2024 03:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவி குளிப்பதை ஒளிந்து இருந்து பார்த்த ஆட்டோ டிரைவர் அஜ்மலை (வயது 26) போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மறைந்து இருந்து, மாணவி குளிப்பதை பார்த்து உள்ளார். போலீசார் விசாரணையில் மாணவி குளித்ததை எட்டி பார்த்தது ஆட்டோ டிரைவர் அஜ்மல் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

