sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருக்கலைப்பை பதிவு செய்ய வேண்டும்:"காசா' அமைப்பு கோரிக்கை

/

கருக்கலைப்பை பதிவு செய்ய வேண்டும்:"காசா' அமைப்பு கோரிக்கை

கருக்கலைப்பை பதிவு செய்ய வேண்டும்:"காசா' அமைப்பு கோரிக்கை

கருக்கலைப்பை பதிவு செய்ய வேண்டும்:"காசா' அமைப்பு கோரிக்கை


ADDED : செப் 22, 2011 01:48 AM

Google News

ADDED : செப் 22, 2011 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''பிறப்பு, இறப்பை பதிவு செய்வது போல, பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும்,'' என, பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசார அமைப்பு (காசா) கூறியுள்ளது.பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசார அமைப்பான, 'கேம்பைன் எகைன்ஸ்ட் செக்ஸ் செலக்ட்டிவ் அபார்ஷன் (காசா)' சார்பில், தமிழகத்தில், ஆறு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் நிலை மற்றும் காணாமல் போகும் பெண் குழந்தைகள் குறித்த மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.



இது குறித்து, 'காசா' அமைப்பின் மூத்த நிர்வாகி மீனா சுவாமிநாதன் பேசியதாவது:

'காசா' அமைப்பு 1998ல் துவங்கப்பட்டது.

பெண் சிசு கருக்கொலைக்கு எதிரான சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதல் கோரிக்கை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ன்படி, ஆறு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. தேசிய அளவில் 25 மாநிலங்களிலும், தமிழகத்தில் 13 மாவட்டங்களிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.

பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.



இந்நிலை, நாடு முழுவதும் பரவலாகி வருகிறது. இதனால், பெண் வன்முறை அதிகரிக்கும். தேசிய அளவிலான பெண்களின் பங்களிப்பும் குறையும்.ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்ற விருப்பம், பெண் குழந்தை வன்முறை, பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையா என அறிந்து அழிக்கும், 'ஸ்கேன்' முறை போன்றவை, பெண் குழந்தை எண்ணிக்கை குறைவிற்கு காரணம். மேலும், பெண் சிசு கருக்கொலைக்கு எதிரான சட்டம் அமலில் இருந்தாலும், சரியாக நடைமுறைபடுத்தவில்லை என்பதும் முக்கிய காரணம். பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வது போல, பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு மீனா சுவாமிநாதன் பேசினார்.



இந்நிகழ்ச்சியில், 'காசா' அமைப்பு உறுப்பினர்கள், பெண்ணிய உரிமை செயல்பாட்டாளர்கள், குழந்தை உரிமை பாதுகாப்பாளர்கள், மக்கள் தொகை புள்ளிவிவர ஆய்வாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us