உணவு பாதுகாப்பு அலுவலர்மாநிலத்தில் 533 பேர் நியமனம்
உணவு பாதுகாப்பு அலுவலர்மாநிலத்தில் 533 பேர் நியமனம்
ADDED : செப் 25, 2011 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:மாநிலம் முழுவதும், 533 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆகஸ்ட் முதல், நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மாநகராட்சிகள் உட்பட 148 நகராட்சிகளிலும், 385 ஒன்றியங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நகராட்சி சுகாதாரத்துறையில் இருந்த அலுவலர்களும், ஒன்றியங்களில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றியவர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.உணவுப்பொருட்களில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிக்கப்பட்டுள்ளதா, தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என இவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.