sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமருக்கு வைகோ கோரிக்கை

/

பிரதமருக்கு வைகோ கோரிக்கை

பிரதமருக்கு வைகோ கோரிக்கை

பிரதமருக்கு வைகோ கோரிக்கை


ADDED : ஜூலை 14, 2011 05:08 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 05:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நியூசிலாந்து நாட்டில் அடைக்கலம் தேடி சென்ற 89 இலங்கை தமிழர்களை இந்தோனேஷியா அரசு பிடித்து வைத்திருக்கும் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 12ம் தேதி இலங்கையிலிருந்து ஒரு படகில் 89 இலங்கை தமிழர்கள் அடைக்கலம் தேடி நியூசிலாந்து நாட்டிற்கு சென்றனர். அவர்கள் இந்தோனேஷிய கடல் எல்லையில் நுழைந்த போது, அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்நாட்டு அரசு அவர்கள் பிடித்து மீண்டும் இலங்கை திரும்ப வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பிரதமருக்கு வைகோ எழுதிய கடிதத்தில், இலங்கை தமிழர்கள் 89 பேரும் சட்டவிரோதமாக அங்கு செல்ல முயற்சிக்க வில்லை. சர்வதேச விதிகளின்படி, அடைக்கலம் கோருவது அவர்களின் உரிமை. இவ்விவகாரத்தில் பிரதமர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்தோனேஷியாவிலிருந்து அவர்களை விடுவிக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.








      Dinamalar
      Follow us