sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நூற்பாலையில் சி.பி.ஐ., சோதனை

/

நூற்பாலையில் சி.பி.ஐ., சோதனை

நூற்பாலையில் சி.பி.ஐ., சோதனை

நூற்பாலையில் சி.பி.ஐ., சோதனை


ADDED : ஆக 20, 2011 05:43 AM

Google News

ADDED : ஆக 20, 2011 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் சி.பி.ஐ.,போலீசார் சோதனை நடத்தினர். அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூரில் உள்ள தனியார் நூற்பாலையில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வந்த சி.பி.ஐ.,போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆந்திரா முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் மோகன் ரெட்டி மீது அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி அலுவலகங்கள் மற்றும் சென்னையில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடந்தது. இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நூற்பாலை நிர்வாகத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலை உள்ளது. இதில், ஜெகன்மோகன்

ரெட்டிக்கு பங்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான பண பரிவர்த்தனைகள் நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில், சி.பி.ஐ., அதிகாரிகள் அருப்புக்கோட்டையில் உள்ள நூற்பு மில்லில் சோதனை செய்தனர். இரவு 8 மணி வரை நடந்த சோதனையில் சி.பி.ஐ., அதிகாரிகள் தேவையான ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us