ADDED : செப் 13, 2011 10:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் அருகே பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு தனியார் மெட்ரிக்பள்ளியில் , கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மகள் கிருபா, 15 பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி, சக மாணவிகளுடன் பள்ளி வளாகத்தில் குரூப் ஸ்டடிக்கு வரமறுத்து தனியாக வகுப்பறையில் இருந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் வைத்திருந்த சேலையால் , மி்ன்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பள்ளி வாட்ச்மேன் போலீசில் கொடுத்த புகாரி்ன் பேரில் ப.வேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.