sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உண்ணாவிரதம்: தி.மு.க.,வினர் பல்டி

/

உண்ணாவிரதம்: தி.மு.க.,வினர் பல்டி

உண்ணாவிரதம்: தி.மு.க.,வினர் பல்டி

உண்ணாவிரதம்: தி.மு.க.,வினர் பல்டி


ADDED : செப் 17, 2011 11:43 PM

Google News

ADDED : செப் 17, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமிபாண்டியன் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது அரசியல் ரீதியாக பழிவாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி போலீசை கண்டித்து நேற்று தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இதில் மாஜி சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக போஸ்டர் ஒட்டி, தடபுடலாக பந்தலும் போடப்பட்டது. இருப்பினும் நேற்று உண்ணாவிரதம் திடீரென ரத்தானது. உண்ணாவிரதத்தில் யாராவது தி.மு.க.,வினர் வேண்டுமென்றே அரசாங்கத்தையும் முதல்வரையும் விமர்சித்து பேசி அதனால் மேலும் வழக்குகள் வரலாம் என்பதால் கருப்பசாமிபாண்டியனே அத்தகைய உண்ணாவிரதம் தேவையில்லை என கேட்டுக்கொண்டாராம். இதனால் போராட்டத்தை திடீரென வாபஸ் பெற்றனர்.








      Dinamalar
      Follow us