ADDED : செப் 22, 2011 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நில அபகரிப்பு தொடர்பாக, ஜுவல்லரி அதிபர் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளிவந்த வீரபாண்டி ஆறுமுகம், நேற்று, சென்னை வந்தார். அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாததால், நிபந்தனையை தளர்த்தக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், தினசரி, பூக்கடை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.