ADDED : செப் 25, 2011 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:-திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி, சுவாமி தரிசனம் செய்தார்.
அதிகாலை 5 மணிக்கு கோயிலுக்கு வந்த அவரை, இணை ஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள், திரிசுதந்திரர்கள் வரவேற்றனர். பின்னர், கோயிலின் அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்த ரவிசங்கர்ஜி, சத்ரு சம்ஹார மூர்த்திக்கு நடந்த சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். காலை 7.30 மணியளவில் தரிசனம் முடிந்து புறப்பட்டார். அவருடன் வாழும்கலை அமைப்பின் நிர்வாகிகள் வந்திருந்தனர்.பட விளக்கம்: திருச்செந்தூர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி.