sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐகோர்ட் குண்டுவெடிப்பு:அப்பாஸ்க்கு 15 நாள் காவல்

/

ஐகோர்ட் குண்டுவெடிப்பு:அப்பாஸ்க்கு 15 நாள் காவல்

ஐகோர்ட் குண்டுவெடிப்பு:அப்பாஸ்க்கு 15 நாள் காவல்

ஐகோர்ட் குண்டுவெடிப்பு:அப்பாஸ்க்கு 15 நாள் காவல்


ADDED : செப் 24, 2011 12:03 AM

Google News

ADDED : செப் 24, 2011 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி;டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட, காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ்வை, 15 நாட்கள் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் காவலில் வைத்து விசாரிக்க, சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியது.கடந்த 7ம் தேதி நடந்த இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, அமீர் அப்பாஸ் தேவும், அபித் உசேன் என்பவரும், காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர்.

டில்லி அழைத்து வரப்பட்ட இவர்களில், அபித் உசேனை அக்டோபர் 5ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு நிறுவன சிறப்பு கோர்ட், நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.இந்நிலையில், அமீர் அப்பாஸ் தேவ்வை, அடுத்த மாதம் 7ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, சிறப்பு கோர்ட் நீதிபதி சர்மா, நேற்று உத்தரவிட்டார். கோர்ட்டில் நேற்று நடைபெற்ற ரகசிய விசாரணையின் போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அப்பாஸ் தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி காஸி மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் மட்டுமே உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us