sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது:ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

/

எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது:ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது:ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

எல்லை தாண்டிய 1,617 மீனவர் கைது:ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்


ADDED : ஆக 23, 2011 04:49 AM

Google News

ADDED : ஆக 23, 2011 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:இரண்டரை ஆண்டுகளில், எல்லையைத் தாண்டி மீன் பிடித்த, 1,617 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைதானதாக, மத்திய வெளியுறவு இயக்குனர் தீபக் மித்தல், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டார்.இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைத் தவிர்க்க, துப்பாக்கி வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், ஸ்டாலின் மற்றும் கண்ணன் தனித்தனி பொது நல வழக்குகளை தாக்கல் செய்தனர். வழக்குகள், நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தன.வெளியுறவு இயக்குனர் தீபக் மித்தல் பதில் மனுவை, உதவி சொலிசிட்டர் ஜெனரல் செந்தில்வேலன் தாக்கல் செய்தார்.

மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக மீனவர்களுக்கு பிரச்னை ஏற்படுகையில், மத்திய அரசு கண்டித்துள்ளது. மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டக் கூடாது. இரு நாட்டு மீனவர்களும், இதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்திய மீனவர்கள், எல்லை தாண்டுகின்றனர். இரண்டரை ஆண்டுகளில், எல்லை தாண்டிய 1,617 மீனவர்கள் கைதாகினர்.

மூன்றாண்டுகளில், 9 பேர் கொல்லப்பட்டனர். 2008ல் இரு நாட்டு மீனவர்கள் பாதுகாப்புக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின், எல்லை தாண்டுவது குறைந்தது. கச்சத்தீவு மீட்பு குறித்து, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்குவது, நடைமுறைக்கு ஒத்துவராது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us