ADDED : ஜூலை 12, 2011 12:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் மூழ்கி பள்ளிச்சிறுவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேட்டுப்பாளையத்தையடுத்த சிறுமுகை பெட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவனர்கள் விக்னேஷ் (14) மற்றும் சிவராஜ் (12) ஆகியோர் தங்களது நண்பர்களுடன் அருகிலிருந்த பவானி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது விக்னேஷ் மற்றும் சிவராஜ் இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். அருகிலிருந்த சிறுவர்கள் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

