sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உத்தப்புரம் கலவரம் 42 பேர் கைது

/

உத்தப்புரம் கலவரம் 42 பேர் கைது

உத்தப்புரம் கலவரம் 42 பேர் கைது

உத்தப்புரம் கலவரம் 42 பேர் கைது


ADDED : செப் 10, 2011 01:25 AM

Google News

ADDED : செப் 10, 2011 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை : மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 42 பேரை போலீசார் கைது செய்தனர்.



இங்கு, பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இரு பிரிவினரும் மாறி, மாறி கற்கள் வீசி தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்தனர். உசிலம்பட்டி டி.எஸ்.பி., குமார், எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன், எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மதுரை எஸ்.பி., ஆஸ்ரா கர்க் சம்பவ இடத்தில் விசாரணை செய்தார்.உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., புகழேந்தி, பேரையூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்த் துறையினர் உத்தப்புரத்தில் முகாமிட்டுள்ளனர்.கலவரத்தில் ஈடுபட்ட இரு பிரிவினரைச் சேர்ந்த 25 பெண்கள் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தப்புரத்தில் தற்போது ஆண்கள் யாரும் இல்லை. கைது நடவடிக்கைக்கு பயந்து இரு பிரிவையும் சேர்ந்த ஆண்கள் தலைமறைவாகி விட்டனர்.








      Dinamalar
      Follow us