ADDED : மே 25, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த விவகாரம் தொடர்பாக, வடமேற்கு போக்குவரத்துக் கழகம், நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை:
சம்பந்தப்பட்ட பஸ்சில், ஓட்டுநர் ஹனுமந்தப்பா, நடத்துனர் அனிதா பணியில் இருந்தனர். மே 23ம் தேதி மாலை 4:30 மணிக்கு பஸ் இயக்கிக் கொண்டிருந்தபோது, மழை பெய்தது.
அப்போது பஸ்சில் பயணியர் ஒருவர் கூட இல்லாமல், காலியாக இருந்தது. இதனால், பொழுதுபோக்கிற்காக, நடத்துனரிடம் இருந்த குடையை, ஓட்டுநர் வாங்கிக் கொண்டு, பஸ்சை ஓட்டி உள்ளார். இதை நடத்துனரே வீடியோ பதிவு செய்துள்ளார். இதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும், பஸ்சின் மேற்கூரையை அதிகாரிகள் சோதனை செய்தபோது, மழைநீர் செல்லும் வகையில் துளைகள் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஓட்டுநர், நடத்துனர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

