ADDED : மார் 06, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக, ஆபாச படம், வீடியோ பதிவிறக்கம் செய்த, 13 ஆயிரம் பேரை, போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட, 43 ஆயிரம் பேர், போலீசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த, 13 ஆயிரம் பேருக்கு, எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. வியாபார நோக்கத்தில் ஆபாச படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்வது தெரியவந்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.