தெற்கு ரயில்வேயில் 143 காலியிடம்: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்'
தெற்கு ரயில்வேயில் 143 காலியிடம்: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்'
UPDATED : செப் 10, 2024 02:29 PM
ADDED : செப் 06, 2024 07:10 AM

சென்னை: தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., மருத்துவமனைகளின் பாரா மெடிக்கல் பிரிவுகளில் 143 காலி பணியிடங்கள் (குரூப் 'சி') நிரப்பப்பட உள்ளன. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 19.
செவிலியர் கண்காணிப்பாளர்- 69
பார்மசிஸ்ட் -22
பிசியோதெரபிஸ்ட்- 2
லேப் அசிஸ்டன்ட்- 18
இ.சி.ஜி., டெக்னீசியன் - 3
சைக்காலஜிஸ்ட்- 1
ஹெல்த் இன்ஸ்பெக்டர்- 20
ரேடியோகிராபர்- 4
பெர்ப்யூஷனிஸ்ட்- 1
எலக்ட்ரானிக் டெக்னீசியன்- 1
எக்கோ டெக்னீசியன் - 2
தகுதிகள் என்ன?
ஓய்வு பெற்ற ஊழியர்கள் கட்டாயமாக ஓய்வு பெற்றிருக்கக் கூடாது. ஏதாவது செய்த தவறு அடிப்படையில் பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கக் கூடாது.
வயது வரம்பு
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 65 வயதை அடையும் மாதத்தின் கடைசி நாள் வரை பணிபுரியலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.