sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

16 அம்ச பாதுகாப்பு விதிகள்; பள்ளி வாகனங்களில் ஆய்வு

/

16 அம்ச பாதுகாப்பு விதிகள்; பள்ளி வாகனங்களில் ஆய்வு

16 அம்ச பாதுகாப்பு விதிகள்; பள்ளி வாகனங்களில் ஆய்வு

16 அம்ச பாதுகாப்பு விதிகள்; பள்ளி வாகனங்களில் ஆய்வு

3


ADDED : ஏப் 30, 2024 04:51 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 04:51 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பள்ளி, கல்லுாரி வாகனங்களில், 16 அம்ச பாதுகாப்பு விதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இயக்கப்படும், 34,835 பள்ளி மற்றும் கல்லுாரி வானங்களின் பாதுகாப்பு குறித்து, ஆண்டுதோறும் மே மாதத்தில் சோதனை நடத்தப்படும்.

போக்குவரத்து துறை, கல்வித்துறை, போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்துவர். பாதுகாப்பு குறைபாடு உள்ள வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:


பள்ளி, கல்லுாரி வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு நடத்துவது வழக்கம். பள்ளி, கல்லுாரிகளுக்கு நேரடியாக சென்றும், சில இடங்களில் வாகனங்களை வரவழைத்தும், முழுமையாக ஆய்வு நடத்தப்படும்.

குறிப்பாக வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுனர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட, 16 அம்சங்கள் குறித்து, ஆய்வு நடத்தப்படும். வரும் கல்வி ஆண்டுக்கான ஆய்வு பணிகள், மே முதல் வாரத்தில் துவங்கி, ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும்.

இதற்கான, ஆய்வு அறிக்கையை போக்குவரத்து ஆணையரகத்திற்கு அனுப்ப உத்தவிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுாரிகள் திறப்பதற்கு முன், இந்த ஆய்வு பணிகளை நிறைவு செய்ய உள்ளோம். வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், எப்.சி., எனப்படும் தகுதிச் சான்று அளிக்கப்பட மாட்டாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், அனுமதி ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us